Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடிப்போ கொரோனா சனியனே..! – தீப்பந்தம் கொளுத்திக் கொண்டு ஓடிய கிராம மக்கள்!

Webdunia
வியாழன், 22 ஏப்ரல் 2021 (13:35 IST)
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனாவை விரட்ட மத்திய பிரதேச கிராம மக்கள் தீப்பந்தம் கொளுத்தி கொண்டு ஓடிய சம்பவம் வைரலாகியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், உலக அளவில் கொரோனா தினசரி பாதிப்பில் இந்தியா முதலிடத்தை அடைந்துள்ளது. இதனால் இந்தியாவில் பல மாநிலங்களில் ஊரடங்கு விதிக்கப்பட்டாலும், ஆக்ஸிஜன் பற்றாக்குறை போன்றவற்றால் நாடு தள்ளாட்டத்தை சந்தித்துள்ளது.

இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் அகர் மல்வா மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் மக்கள் இரவு நேரத்தில் கைகளில் தீப்பந்தத்தை கொளுத்திய படி “ஓடு கொரோனா ஓடு” என இந்தியில் கத்திக் கொண்டு ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments