Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய பிரதேசம்: சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பலி

Webdunia
புதன், 21 நவம்பர் 2018 (17:58 IST)
மத்திய பிரதேசத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளனர்.  இச்சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆகிழ்த்தியுள்ளது.
 
தேசிய நெடுஞ்சாலை எண் 26-ல் உத்தரபிரதேசத்தின் லலித்பூர் பகுதியில் இருந்து மத்திய பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தை நோக்கி சொகுசு கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது.
 
இந்த கார் சாகர் மாவட்டத்தை நெருங்கியபோது எதிர் திசையில் வந்துகொண்டிருந்த ட்ரக் மீது நேருக்கு நேர் மோதியது.
 
இந்த விபத்தில் சொகுசு காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பெரும் பேரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர். மேலும் விபத்தில் படுகாயமடைந்த 4 பேரை அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
 
ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேரும் பலியாகியுள்ளது அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments