Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷ பிரசாதம் விவகாரம்: தலைமறைவாக இருந்த மடாதிபதி காதலியுடன் கைது

Webdunia
வியாழன், 20 டிசம்பர் 2018 (20:25 IST)
கடந்த சில நாட்களுக்கு முன் பிரசாதத்தில் விஷம் கலந்ததால் 15 பேர் மரணம் அடைந்த சம்பவத்திற்கு காரணமாக இளைய மடாதிபதி ஒருவர் காதலியுடன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகாவில் உள்ள கோவில் ஒன்றில் பூஜை நடந்த பின்னர் பக்தர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பிரசாதத்தில் விஷம் கலக்கப்பட்டிருந்ததால் 15 பக்தர்கள் பரிதாபமாக பலியாகினர். மேலும் நூற்றுக்கணக்கானோர் உடல்நிலை பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இந்த விஷ பிரசாதம் விவகாரத்தில் சாளுர் மடத்தின் இளைய மடாதிபதி மகா தேவசாமி என்பவரை போலீசார் தேடி வந்தனர். சற்றுமுன் அந்த இளையமடாதிபதி தனது காதலி அம்பிகாவுடன் கைது செய்யப்பட்டதாக கர்நாடக தொலைக்காட்சி செய்தி சேனல்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

கோவில் நிர்வாகத்தை கைப்பற்ற நடந்த போட்டியின் காரணமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்ட பிரசாதத்தில் விஷம் கலக்கப்பட்டதாக இளைய மடாதியிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த கொடூர செயலுக்கு உடைந்தையாக இருந்ததாக இளைய மடாதிபாதியின் காதலி அம்பிகா உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலகின் முதல் வாட்டர் போரை ஆரம்பிக்கின்றதா இந்தியா? நிபுணர்கள் சொன்னது உண்மையாகிறது..!

ஜியோ, ஏர்டெல் உடன் போட்டி போட முடியவில்லை.. திடீரென விலகிய அதானி..!

பயங்கரவாதிகளை முட்டாளாக்கி குடும்பத்துடன் தப்பிய அஸ்ஸாம் பேராசிரியர்..!

இந்திய விமானங்களுக்கான வான்வழியை மூடியது பாகிஸ்தான்.. பதிலடியா?

மோடி போட்ட உத்தரவு? பாகிஸ்தான் கடல்பகுதியில் நுழையும் விக்ராந்த் போர் கப்பல்? - அதிர்ச்சியில் பாகிஸ்தான்!

அடுத்த கட்டுரையில்
Show comments