Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமையல் எரிவாயு விலை ரூ.16.50 உயர்வு, 1 % நுகர்வோரை மட்டுமே பாதிக்கும்

Webdunia
வெள்ளி, 4 ஜூலை 2014 (12:54 IST)
மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.16.50 அதிகரிப்பு, 99 நுகர்வோரைப் பாதிக்காது என்றும் இந்த விலை உயர்வு, ஒரு சதவீதத்திற்கும் குறைவான நுகர்வோரை மட்டுமே பாதிக்கும் என்று பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
எண்ணெய் விற்பனை நிறுவனங்கள், மானியம் அல்லாத வீட்டு உபயோக சிலிண்டர் விலையை ரூ. 16.50 அதிகரித்துள்ளன. இந்த விலை உயர்வு ஜூன் 30 மற்றும் ஜூலை 1 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது ஆண்டுக்கு 12 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வீடுகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கு மேலும் விற்பனை செய்யப்படும் சிலிண்டர் விலை அதாவது மானியம் அல்லாத சிலிண்டர் விலை மேலும் ரூ.16.50 ஆக அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் உள்ள விலையைக் கருத்தில் கொண்டு இதற்கான விலை உயர்த்தப்பட்டுள்ளது.
 
ஆண்டுக்கு 12 சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்துவோர் 99 சதவீதத்திற்கும் கூடுதலாகும். இவர்களுக்கு எந்த விதத்திலும் இந்த விலை உயர்வால் பாதிப்பு இல்லை. இந்த விலை அதிகரிப்பு ஒரு சதவீதத்திற்கும் குறைவான நுகர்வோரை மட்டுமே பாதிக்கும் என்று பெட்ரோலிய அமைச்சக செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

Show comments