Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலியின் ஆபாச படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்ட வாலிபர்

Webdunia
செவ்வாய், 29 ஜூலை 2014 (13:20 IST)
மும்பையில் திருமணம் செய்ய மறுத்த காதலியின் ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டவர் கைது செய்யப்பட்டார்.
 
மும்பை கிர்காவ், வி.பி.சாலையில் உள்ள சிக்கா நகரை சேர்ந்தவர் பான்சல் (வயது 24). துணி வியாபாரம் செய்து வருகிறார். இவர் தன்னுடன் பள்ளி மற்றும் கல்லூரில் படித்த 24 வயது இளம் பெண்ணை காதலித்து வந்தார். அப்போது இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது பான்சல் தன் காதலியை ஆபாசமாக செல்போனில் படம் பிடித்து வைத்திருந்தார். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பான்சலின் காதலி அவரை விட்டு பிரிந்து விட்டார். இருப்பினும் பான்சல் தன் காதலியையே திருமணம் செய்து கொள்ள விரும்பினார்.
 
இந்தநிலையில் அந்த இளம் பெண்ணுக்கு மற்றொருவருடன் திருமணம் நிச்சயம் ஆன விஷயம் பான்சலுக்கு தெரியவந்தது. இதையடுத்து பான்சல் தன்னை திருமணம் செய்து கொள்ளுபடி காதலியிடம் கெஞ்சினார். ஆனால் அவர் பான்சலை கண்டு கொள்ளவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பான்சல் காதலிக்கு நிச்சயம் செய்யப்பட்டவரிடம் சென்று அவளின் ஆபாச படத்தை காண்பித்தார். மேலும் அந்த ஆபாச படத்தை சமூக வலைதளங்களிலும் வெளியிட்டார். தன் ஆபாச படம் சமூக வலைதளத்தில் வெளியானதை பார்த்து அந்த இளம் பெண் அதிர்ச்சி அடைந்தார். மேலும் இதுகுறித்து அவர் எல்.டி.மார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பான்சலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!