Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காதலியின் ஆபாச படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்ட வாலிபர்

காதலியின் ஆபாச படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்ட வாலிபர்
, செவ்வாய், 29 ஜூலை 2014 (13:20 IST)
மும்பையில் திருமணம் செய்ய மறுத்த காதலியின் ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டவர் கைது செய்யப்பட்டார்.
 
மும்பை கிர்காவ், வி.பி.சாலையில் உள்ள சிக்கா நகரை சேர்ந்தவர் பான்சல் (வயது 24). துணி வியாபாரம் செய்து வருகிறார். இவர் தன்னுடன் பள்ளி மற்றும் கல்லூரில் படித்த 24 வயது இளம் பெண்ணை காதலித்து வந்தார். அப்போது இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது பான்சல் தன் காதலியை ஆபாசமாக செல்போனில் படம் பிடித்து வைத்திருந்தார். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பான்சலின் காதலி அவரை விட்டு பிரிந்து விட்டார். இருப்பினும் பான்சல் தன் காதலியையே திருமணம் செய்து கொள்ள விரும்பினார்.
 
இந்தநிலையில் அந்த இளம் பெண்ணுக்கு மற்றொருவருடன் திருமணம் நிச்சயம் ஆன விஷயம் பான்சலுக்கு தெரியவந்தது. இதையடுத்து பான்சல் தன்னை திருமணம் செய்து கொள்ளுபடி காதலியிடம் கெஞ்சினார். ஆனால் அவர் பான்சலை கண்டு கொள்ளவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பான்சல் காதலிக்கு நிச்சயம் செய்யப்பட்டவரிடம் சென்று அவளின் ஆபாச படத்தை காண்பித்தார். மேலும் அந்த ஆபாச படத்தை சமூக வலைதளங்களிலும் வெளியிட்டார். தன் ஆபாச படம் சமூக வலைதளத்தில் வெளியானதை பார்த்து அந்த இளம் பெண் அதிர்ச்சி அடைந்தார். மேலும் இதுகுறித்து அவர் எல்.டி.மார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பான்சலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil