Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கியது: நாடு முழுவதும் 65 லட்சம் லாரிகள் ஓடவில்லை

Webdunia
வெள்ளி, 20 ஜூலை 2018 (06:46 IST)
இந்தியா முழுவதும் இன்று காலை 6 மணி முதல் லாரி உரிமையாளர்கள் தங்களுடைய வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளதால் இந்தியாவில் 65 லட்சம் லாரிகளும், தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகளும் ஓடவில்லை. இந்த வேலைநிறுத்தம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வலியுறுத்துவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் நடத்தும் லாரிகள் வேலைநிறுத்தம் சற்றுமுன் தொடங்கியது. டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருப்பது, தனிநபர் காப்பீடு தொகை உயர்வு, சுங்கவரி ஆகியவைகளை கண்டித்து இன்று காலை 6 மணி முதல் வேலைநிறுத்தம் செய்வதாக அகில இந்திய லாரிகள் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
 
இந்த வேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடாது என்றும் இதனால் ரூ.200 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கும் நிலை தமிழகத்தில் உள்ளது என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து உடனடியாக மத்திய அரசு லாரி உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இனி 2 முறை பொதுத்தேர்வு! - சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடைசி தேதி திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் விஜய் போட்டியா? தேர்தல் ஆய்வாளர் வம்சி பேட்டி..!

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments