Webdunia - Bharat's app for daily news and videos

Install App

40 ஆண்டுகளாக மின்சாரம் இல்லை:தற்கொலைக்கு முயன்ற விவசாயி

Webdunia
செவ்வாய், 18 ஜூன் 2019 (17:45 IST)
மகாராஷ்டிராவில் 40 ஆண்டுகளாக மின் இணைப்பு கிடைக்காததால் விவசாயி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் வடோடா என்கிற குக்கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் கராத்தே என்பவர் கடந்த 1980 ஆம் ஆண்டு மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருந்தார்.

ஆனால் 40 ஆண்டுகளாகியும் மின்சாரம் வழங்கப்படவில்லை. ஆதலால் ஸ்ரீராம் கராத்தேவின் பேரன் ஈஸ்வர் கராத்தே என்பவர், புல்தானா மாவட்டத்திலுள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்ற ஈஸ்வர் கராத்தே, மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக புல்தானா மின்சார அதிகாரி, 1980-ல் மின்சார இணைப்புக்கு விண்ணப்பம் கோரிய ஸ்ரீராம் கராத்தே இறந்துவிட்டார் எனவும், 2006 ஆம் ஆண்டு நிலுவை தொகையை செலுத்துமாறு ஈஸ்வர் கராத்தேவிற்கு அனுப்பப்பட்டதாகவும், ஆனால் அவர் நிலுவைத் தொகையை செலுத்த தவறிவிட்டார் எனவும் கூறினார்.

மேலும் அவர், ஈஸ்வர் கராத்தே நிலுவைத் தொகையை செலுத்தினால் மின் இணைப்பு தர தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஈஸ்வர் கராத்தே விஷம் குடித்து தற்கொலை செய்து கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

திடீரென தமிழகம் வருகிறார் அமைச்சர் அமித்ஷா.. ஈபிஎஸ், ஓபிஎஸ் உடன் சந்திப்பா?

இனி ஆதார் அட்டை தேவையில்லை.. முகம் ஒன்றே போதும்: மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments