Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இவ்வளவு களோபரத்திலும் இத்தனை பொறுமையா: வியக்க வைக்கும் புகைப்படம்!

Webdunia
புதன், 22 ஆகஸ்ட் 2018 (14:23 IST)
தென்மேற்கு பருவமழை கேரளாவை புரட்டிப்போட்டது. கனமழை, வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றால் பாதிக்கப்பட்ட கேரளா தற்போது மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. 
 
வெள்ள நீர் வடிய துவங்கியுள்ளதால், பொது மக்கள் தங்களது வீடுகளை சுத்தம் செய்து குடியேற துவங்கியுள்ளனர். ஏடிஎம், பெட்ரோல் பங்குகள், மொபைல் நெட்வொர்க் சேவைகள் அனைத்தும் இயல்பாக செயல்பட துவங்கியுள்ளன. 
 
இந்நிலையில், வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பு சுமார் 2 கிமீ வரை அமைதியாய் வரிசையில் நிற்கும் கேரள மக்கள் வியப்பை கொடுத்துள்ளனர். யாரும் முந்தி அடித்துக்கொள்ளாமல், பொறுமையாக செயல்படுவது வியப்பை அளிக்கிறது. 
 
இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. கேரள மக்களின் இந்த ஒழுக்கமான நடைமுறைகளை பலரும் பாராட்டி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments