Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி வேட்பாளரின் கையில் இருக்கும் பணம் வெறும் 100 ரூபாய்

Webdunia
புதன், 2 ஏப்ரல் 2014 (13:17 IST)
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில்,  டெல்லியை சேர்ந்த ஒரு வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ.100 மட்டும் தான் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 
நாடாளுமன்ற தேர்தலுக்காக நாடு முழுவதும் வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில் கிழக்கு டெல்லியை சேர்ந்த வேட்பாளரான ராமானுஜன் படேலின் சொத்து மதிப்பு ரூ.100 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

37 வயதான ராமானுஜன் படேல் முதுநிலை பட்டபடிப்பை முடித்துவிட்டு, பத்திரிகையாளராக பணிபுரிந்து வந்தார். தற்போது வேலையில்லாமல் இருக்கும் இவர், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிலேயே மிகவும் குறைந்த சொத்து மதிப்பை உடையவரென தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
வேட்புமனு தாக்கலின்போது வேட்பாளர்கள் தங்களின் சொத்து விவரங்களை கட்டாயம் தெரிவிக்க வேண்டும். இந்நிலையில் டெல்லி தொகுதியில் சமயக் பரிவர்தன் கட்சி சார்பில் போட்டியிடும் ராமானுஜனின் கையிருப்பு பணம் ரூ.100 மட்டும் தான் என தெரிகிறது.
 
இது குறித்து தெரிவித்த அவர், என்னிடம் வங்கிக் கணக்கு இல்லை. ஆனால் தேர்தலில் போட்டியிட வங்கியில் கணக்கு துவங்க வேண்டுமென்பதால் 1000 ரூபாய் கடன் வாங்கி பாரத ஸ்டேட் வங்கியில்  கணக்கை துவங்கினேன்.
 
தேர்தலில் போட்டியிட செலுத்த வேண்டிய ரூ.25,000 டெபாசிட் பணத்தை எனக்காக 16 பேர் அளித்துள்ளனர் எனக் கூறினார். 
 
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments