Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 ரன்னுக்கு ஆல் அவுட்: 754 ரன் வித்தியாசத்தில் வெற்றி! என்னங்கடா இது?

Webdunia
வியாழன், 21 நவம்பர் 2019 (20:39 IST)
மும்பையில் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் ஆட்டத்தில் 754 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு பள்ளி வெற்றியடைந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் நடைபெற்ற ஹரீஷ் ஷீல்ட் கிரிக்கெட் போட்டியில் சுவாமி விவேகானந்தா பன்னாட்டு பள்ளியும், சில்ரன் வெல்ஃபேர் பள்ளியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த விவேகானந்தா பள்ளி அணி 39 ஓவர்களில் 761 ரன்கள் எடுத்தது.

இரண்டாவதாக விளையாடிய சில்ரன் வெல்ஃபேர் அணி மோசமாக ஆடியதால் 6 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 7 ரன்கள் மட்டுமே பெற்றது. இதனால் விவேகானந்தா பள்ளி அணி 754 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

விவேகானந்தா அணி சிறப்பாக விளையாடிய போதும், சில்ரன் வெல்ஃபேர் அணி கிரிக்கெட்டில் பெரிய அணிகளோடு மோதி பழக்கமில்லாததால் அதிக ரன்கள் எடுக்க விட்டுவிட்டதாகவும், சரியாக ஸ்கோர் செய்ய முடியாததாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாபில் காலிஸ்தான் ஆதரவாளர்கள்.. கொலை வழக்கில் தண்டனை பெற்றவர் உள்பட 3 பேர் கைது..!

இந்திய ரூபாய் மதிப்பு மேலும் உயர்வு.. 20 காசுகள் உயர்ந்து வர்த்தகம் முடிவு..!

வெள்ளை வேஷ்டி, வெள்ளை மேல்சட்டை.. தொப்பியுடன் இப்தார் விருந்தில் விஜய்..!

சென்னை பல்கலை தேர்வு முடிவு வெளியீடு.. மறு மதிப்பீட்டுக்கு எப்போது விண்ணப்பிக்கலாம்?

ஐந்து ஆண்டுகளாக ஆதிதிராவிடர் நலக் குழு செயல்படவில்லை.. ஆர்.டி.ஐ தகவலால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments