Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர்: தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர்: தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்
, புதன், 22 ஏப்ரல் 2015 (07:46 IST)
பெங்களூருவில் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 17 வயது வாலிபருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் அவரை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
 
கர்நாடக மாநிலம் பெருங்களூரு ஜலாஹல்லி என்ற இடத்திற்கு அருகே உள்ள மதுவிடுதி ஒன்றில் வேலை பார்த்து வரும் வாலிபர் ஒருவர், நேற்று வேலை முடிந்து தன் குடியிருப்புக்கு திரும்பியுள்ளார். அப்போது, 5 வயது சிறுமி சாலையில் விளையாடிக் கொண்டிருந்தாள்.
 
அப்போது அந்தச் சிறுமியை, பொதுக் கழிப்பிடத்திற்கு இழுத்துச் சென்ற அந்த வாலிபர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
 
இந்நிலையில், இதைப் பார்த்த சிலர், அந்த வாலிபருக்கு தர்மஅடி கொடுத்துள்ளனர். பின்னர் அந்த வாலிபரை காவல் துறையிடம் ஒப்படைத்தனர். இது குறித்து பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil