Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுபான உரிமை முறைகேடு - கெஜ்ரிவால் முக்கிய குற்றவாளி - மத்திய அமைச்சர் தாக்கூர்

Webdunia
சனி, 20 ஆகஸ்ட் 2022 (16:02 IST)
மதுபான உரிமை வழங்குவது தொடர்பான முறைகேட்டில் கெஜ்ரரிவால்தான் முக்கிய குற்றவாளி என  மத்திய அமைச்சர் தாகூர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் முதலமைச்சராக அரவிந்த் கேஜரிவால் இருந்துவரும் நிலையில் துணை முதலமைச்சராக மனிஷ் சிசோடியா செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா வீட்டில்  நேற்று காலை திடீரென சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்தனர்.

மதுபானம் உரிமை வழங்குவதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்த புகாரின் அடிப்படையில்  மணிஸ் சிசோடியாவுக்குச் சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதில், மிக முக்கிய ஆவணங்கள்  கைப்பற்றியதாகவும், இது சம்பந்தமாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே முதல் குற்றவாளியாக சிசோடியா உள்ளதாக கூறப்படுகிறது.

இதுபற்றி கூறிய மணி சிசோடியா, முதல்வர் கெஜ்ரிவாலை கண்டு பயன்படுவதால் மத்திய பாஜக அரசு  சிபியை மூலம் சோதனை நடத்தி வருவதாகத் தெரிவித்தார்.

இதற்குப் பதிலடி தரும் வகையில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், மதுபான மோடியில் முதல் குற்றவாளியாகப் மணீஸ் சிசோடியாவின்  பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.  

ஆனால்,  முக்கியமான குற்றவாளி கெஜ்ரிவால், இந்த மோசடியில் அவரது உண்மை முகம் வெளியாகியுள்ளது என்றும்  இதுபற்றி அடுத்த 24 மணி  நேரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டுமென  கெஜ்ரிவாலுக்கு  சவால் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் காலமானார்..!

இந்திய தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை.. அமெரிக்காவில் பேசிய ராகுல் காந்தி..!

அம்மாவும் மகனும் சேர்ந்து அப்பாவை கொலை செய்த கொடூரம்.. அதிர்ச்சி காரணம்..!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. ரூ.50,000 சம்பளம் வாங்குபவர் ரூ.1,57,500 வாங்க வாய்ப்பு..!

ஏன் என்கிட்ட கேக்கறீங்க? எனக்கு என்ன அதிகாரம் இருக்கு? - திமுக மீது பழனிவேல் தியாகராஜன் அதிருப்தியா?

அடுத்த கட்டுரையில்
Show comments