Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாத்தியா..! அண்ணன் இப்பவே ஆரம்பிச்சிட்டாரு! – சரக்கு கிடைத்த களிப்பில் மதுவிரும்பிகள் #WebViral

Webdunia
திங்கள், 4 மே 2020 (14:38 IST)
ஊரடங்கு தளர்வுகளால் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மது விரும்பிகளின் கொண்டாட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. மூன்றாம் கட்டமாக மே 17 வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சில தளர்வுகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி நாடு முழுவதும் மூடப்பட்டிருந்த மதுக்கடைகள் ஒவ்வொரு பகுதியிலும் திறக்கப்பட்டு வருகிறது. இன்று கர்நாடகாவில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் காலையிலிருந்தே மதுக்கடைகள் முன்பு மது விரும்பிகள் கூட்டமாக கூட தொடங்கிவிட்டனர்.

பல இடங்களில் சமூக இடைவெளியோடு கிலோமீட்டர் தூரத்திற்கு பலர் நின்று கொண்டிருக்கும் அதே சமயம் பல இடங்களில் தள்ளு முள்ளு ஏற்பட்டு கடைகள் முன்பு கூட்டமும் குவிந்து வருகிறது. தற்போது கர்நாடகாவின் பச்சை மண்டல பகுதிகளில் மட்டுமே மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மது கிடைத்த மகிழ்ச்சியில் மது விரும்பிகள் உற்சாக நடனமாடும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

அதேசமயம், இதுபோன்ற செயல்களால் சமூக இடைவெளி இல்லாமல் கொரோனா பரவ வாய்ப்பு அதிகரித்துள்ளதாக பலர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

மத்திய அமைச்சர் ஆகிறாரா சௌமியா அன்புமணி.. 2026ல் வேற ஒரு கணக்கு..!

நெல் கொள்முதல் அளவு குறைந்தது ஏன்.? ஆய்வு செய்ய அரசுக்கு அன்புமணி கோரிக்கை..!!

கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்.! திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை.!

அடுத்த கட்டுரையில்
Show comments