Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாத்தியா..! அண்ணன் இப்பவே ஆரம்பிச்சிட்டாரு! – சரக்கு கிடைத்த களிப்பில் மதுவிரும்பிகள் #WebViral

Webdunia
திங்கள், 4 மே 2020 (14:38 IST)
ஊரடங்கு தளர்வுகளால் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மது விரும்பிகளின் கொண்டாட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. மூன்றாம் கட்டமாக மே 17 வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சில தளர்வுகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி நாடு முழுவதும் மூடப்பட்டிருந்த மதுக்கடைகள் ஒவ்வொரு பகுதியிலும் திறக்கப்பட்டு வருகிறது. இன்று கர்நாடகாவில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் காலையிலிருந்தே மதுக்கடைகள் முன்பு மது விரும்பிகள் கூட்டமாக கூட தொடங்கிவிட்டனர்.

பல இடங்களில் சமூக இடைவெளியோடு கிலோமீட்டர் தூரத்திற்கு பலர் நின்று கொண்டிருக்கும் அதே சமயம் பல இடங்களில் தள்ளு முள்ளு ஏற்பட்டு கடைகள் முன்பு கூட்டமும் குவிந்து வருகிறது. தற்போது கர்நாடகாவின் பச்சை மண்டல பகுதிகளில் மட்டுமே மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மது கிடைத்த மகிழ்ச்சியில் மது விரும்பிகள் உற்சாக நடனமாடும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

அதேசமயம், இதுபோன்ற செயல்களால் சமூக இடைவெளி இல்லாமல் கொரோனா பரவ வாய்ப்பு அதிகரித்துள்ளதாக பலர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments