Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென தாக்கிய இடி - மின்னல்.. 3 கிரிக்கெட் வீரர்கள் பரிதாப பலி..!

Siva
ஞாயிறு, 18 மே 2025 (11:02 IST)
தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் பிரசாத், நண்பர்களான 11 வயது யஷ்வந்த் மற்றும் ரவிக்கிரண் உடன் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார். அப்போது வானம் இருண்டு, சூறாவளியுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. மழையிலிருந்து தற்காலிகமாக தப்பிக்க, அருகிலுள்ள மாம்பழத் தோட்டத்துக்குள் சென்ற அவர்கள் மீது திடீரென இடி, மின்னல் விழுந்தது.
 
இந்த துயரமான சம்பவத்தில், பிரசாத் மற்றும் யஷ்வந்த் இருவரும் இடத்திலேயே உயிரிழந்தனர். ரவிக்கிரண் தீவிரமாக காயமடைந்து, உணர்விழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
 
இதேபோல், காமரெட்டி மாவட்டத்தை சேர்ந்த 25 வயதான சுரேஷ், நண்பர் மகேஷுடன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது, மழையுடன் இடி மின்னல் ஏற்பட்டது. அதில் சுரேஷ் நேரில் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.
 
இந்த இயற்கை சீற்றங்கள் மனித உயிர்களுக்கு ஏற்படுத்தும் ஆபத்து மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தும் வகையில் இந்தச் சம்பவங்கள் வெளியாகியுள்ளன. மழைக்காலங்களில் பாதுகாப்பான இடங்களில் இருக்கும் பழக்கத்தை வளர்க்கும் அவசியம் இந்நேரத்தில் வலியுறுத்தப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருச்செந்தூரில் வைகாசி விசாக திருவிழா எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு..!

இனி வெயில் இல்லை, இடி மின்னலுடன் மழை தான்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் திட்டம் தோல்வி.. இஸ்ரோ அதிர்ச்சி அறிவிப்பு..!

வங்கதேசத்துடன் வணிகத்தை குறைக்கிறது இந்தியா.. $700 மில்லியன் ஏற்றுமதி பாதிப்பா?

சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர்.. மும்பையில் 250 பேர், ஹரியானாவில் 237 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments