Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎஸ் அதிகாரி ரூபா மீது ரூ.20 கோடி அவமதிப்பு வழக்கு

Webdunia
செவ்வாய், 28 நவம்பர் 2017 (16:08 IST)
பெங்களூர் பார்ப்பன அக்ராஹர சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, ரூ.2 கோடி வரை லஞ்சம் கொடுத்து சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் என்பதை ஆதாரத்துடன் கண்டுபிடித்து வெளியுலகிற்கு அறிவித்தவர் துணிச்சலான பெண் ஐபிஎஸ் அதிகாரி ரூபா
 
சிறைத்துறை டிஐஜி ஆக இருந்த ரூபா, சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயணா ராவ் அவர்களும் இதற்கு உடந்தை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தார்.
 
இந்த நிலையில் தன்மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டி கூறி தனது புகழுக்கு களங்கம் விளைவித்ததாக ரூபா மீது சத்தியநாராயணா ராவ், ரூ.20 கோடி நஷ்ட ஈடு கேட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.
 
இந்த வழக்கு இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து டிசம்பர் 16ஆம் தேதிக்குள் ரூபா பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். 
 
இந்த நிலையில் ரூ.20 கோடி நஷ்ட ஈடு கேட்டு என் மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருப்பது அடிப்படை ஆதாரமற்றது என்று ரூபா தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எனக்கு பிரதமர் ஆசை இல்லை.. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்..!

மின் கட்டணம் செலுத்தாததால் இருளில் மூழ்கிய ராமேஸ்வரம் பாம்பன் பாலம்.. சுற்றுலா பயணிகள் அதிருப்தி

மீண்டும் உச்சம் சென்றது பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

முல்லைப் பெரியாரில் புதிய அணை கட்டுவதா.? கேரளாவுக்கு அன்புமணி கண்டனம்..!!

இனிமேல் மோடி தான் பிரதமர் என எப்படி சொல்வார் பிரசாந்த் கிஷோர்? சரவணன் அண்ணாதுரை

அடுத்த கட்டுரையில்
Show comments