Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமான நிலையத்தில் புகுந்த சிறுத்தை… 10 மணி நேர போராட்டத்தில் வனத்துறையினர்!

Webdunia
வியாழன், 3 டிசம்பர் 2020 (10:37 IST)
உத்தரகாண்ட் விமான நிலையத்தில் ஒரு வயதுள்ள பெண் சிறுத்தை ஒன்று புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தில் டேராடூன் ஜாலிகிராண்ட் பகுதியில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. அங்கு வனத்தில் இருந்து தப்பி வந்த பெண் சிறுத்தை ஒன்று புகுந்துள்ளது. விமானங்களின் இரைச்சலால் மிரண்ட அந்த சிறுத்தை கட்டுமானப்பணிகள் நடந்து கொண்டிருந்த பகுதிகளில் சென்று பதுங்கியது. சிறுத்தை தப்பி வந்தது குறித்து வனத்துறையினருக்கு தகவல் சொல்லப்பட்ட நிலையில் அங்கு வந்த அவர்கள் 10 மணி நேரப்போராட்டத்துக்கு பின் அந்த சிறுத்தையை பிடித்து காட்டுப்பகுதியில் விட்டுள்ளனர். உணவு மற்றும் தண்ணீருக்காக சிறுத்தை வழிதவறி இங்கு வந்திருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments