Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணமக்களுக்கு கிடைத்த அசாதாரண திருமணப் பரிசு - வைரல் க்ளிக்!!

Webdunia
புதன், 20 ஏப்ரல் 2022 (11:20 IST)
குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள மணமகன் ஒருவருக்கு வழக்கத்திற்கு மாறான ஒரு அசாதாரண திருமணப் பரிசு கிடைத்துள்ளது. 

 
கோடை வெயில் நேரத்தில் எலுமிச்சம் பழச்சாறு குடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ள மக்கள், எலுமிச்சை விலை திடீர் உயர்வால் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஒரு கிலோ ரூ.200 ஆக விற்பனையாகி வரும் நிலையில் வடமநிலங்களில் ரூ.300-க்கும் மேல் விற்கப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள மணமகன் ஒருவருக்கு வழக்கத்திற்கு மாறான ஒரு அசாதாரண திருமணப் பரிசு கிடைத்துள்ளது. மணமகனுக்கு அவரது நண்பர்கள் ஒரு பெட்டி நிறைய எலுமிச்சம் பழங்களை பரிசாக அளித்துள்ளனர். தனது திருமணத்திற்காக மணமகனிடம் எலுமிச்சம் பழங்களை நண்பர்கள் பரிசளிக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
 
குஜராத்தில் எலுமிச்சம்பழம் ஒரு கிலோவுக்கு 200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தலைநகர் டெல்லியில் எலுமிச்சையின் விலை கிலோவுக்கு 300 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வுக்கு முன், எலுமிச்சை பழம் கிலோ, 50 முதல், 69 ரூபாய்க்கு விற்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments