Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட் சூதாட்டம் சட்டபூர்வமாகிறதா?

Webdunia
வியாழன், 5 ஜூலை 2018 (22:42 IST)
கிரிக்கெட் சூதாட்டம் உள்பட ஒருசில சூதாட்டங்களை சட்டபூர்வமாக்கலாம் என  மத்திய சட்ட ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. ஆனால் இந்த பரிந்துரைக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
 
இந்தியாவில் கிரிக்கெட் சூதாட்டம் என்பது சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. காவல்துறை இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் நாளுக்கு நாள் சூதாட்டம் அதிகரிக்கின்றதே தவிர குறைந்தபாடில்லை
 
இந்த நிலையில் கிரிக்கெட் சூதாட்டம் மற்றும் சில வகை பந்தயங்களின் வழியாக கருப்புப்பணம் மற்றும் ஹவாலா பணம் ஆகியவை பெரும்பாலும் புழங்கி வருகிறது. இதனால்  சூதாட்டத்தை சட்டபூர்வமாக்க வேண்டும் என மத்திய சட்ட ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
 
பான் கார்டு, ஆதார் எண் ஆகிய ஆதாரங்கள் பெற்று முழுவதும் பணமில்லா பரிவர்த்தனை செய்து சூதாட்டம் நடத்த அனுமதித்தால் கருப்புப்பணத்தை பெருமளவில் கட்டுப்படுத்த முடியும் என அந்த பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாளை பெளர்ணமி.! திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.!

இரவு 10 மணி வரை 34 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கைகளால் மனிதக் கழிவை அகற்றும் ஊழியர்.! மாநகராட்சி மீது நடவடிக்கை பாயுமா.?

ராஜேஷ் தாஸ் மீது மனைவி புகார்.! கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு..!!

நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments