Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜராத்தில் 10 தீவிரவாதிகள் ஊடுருவல்: 3 பேர் சுட்டுக்கொலை

Webdunia
புதன், 16 மார்ச் 2016 (11:39 IST)
பாகிஸ்தான் நாட்டின் லஸ்கர்-இ-தொய்பா, ஜெய்ஸ்-இ-முகமது ஆகிய தீவிரவாத இயக்கங்களைச் சேர்ந்த தீவிரவாதிகள் 10 பேர், கடல் வழியாக குஜராத் மாநிலத்தில் ஊடுருவியதாக உளவுத்துறை தெரிவித்திருந்தது.


 


அந்த தீவிரவாதிகள் சோமநாதர் கோவில் உள்பட முக்கிய இடங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறியது.
 
இதைத் தொடர்ந்து, குஜராம் மாநிலம் மட்டுமின்றி நாட்டின் பெருநகரங்கள் அனைத்திற்கம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உஷார்படுத்தப்பட்டன.
 
தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்த 4 குழுக்களை குஜராத் மாநிலத்திற்கு மத்திய அரசு அனுப்பிவைத்தது.
 
அந்தக் குழுவினர் குஜராத்தின் முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டனர். இந்நிலையில், 10 தீவிரவாதிகளில் 3 பேர், சுட்டுக்கொல்லப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
அத்துடன் மற்ற 7 பேரும் இரக்கும் இடம் தெரிய வந்திருப்பதாகவும், அவர்களை பிடிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

Show comments