Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குஜராத்தில் 10 தீவிரவாதிகள் ஊடுருவல்: 3 பேர் சுட்டுக்கொலை

குஜராத்தில் 10 தீவிரவாதிகள் ஊடுருவல்: 3 பேர் சுட்டுக்கொலை
, புதன், 16 மார்ச் 2016 (11:39 IST)
பாகிஸ்தான் நாட்டின் லஸ்கர்-இ-தொய்பா, ஜெய்ஸ்-இ-முகமது ஆகிய தீவிரவாத இயக்கங்களைச் சேர்ந்த தீவிரவாதிகள் 10 பேர், கடல் வழியாக குஜராத் மாநிலத்தில் ஊடுருவியதாக உளவுத்துறை தெரிவித்திருந்தது.


 


அந்த தீவிரவாதிகள் சோமநாதர் கோவில் உள்பட முக்கிய இடங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறியது.
 
இதைத் தொடர்ந்து, குஜராம் மாநிலம் மட்டுமின்றி நாட்டின் பெருநகரங்கள் அனைத்திற்கம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உஷார்படுத்தப்பட்டன.
 
தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்த 4 குழுக்களை குஜராத் மாநிலத்திற்கு மத்திய அரசு அனுப்பிவைத்தது.
 
அந்தக் குழுவினர் குஜராத்தின் முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டனர். இந்நிலையில், 10 தீவிரவாதிகளில் 3 பேர், சுட்டுக்கொல்லப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
அத்துடன் மற்ற 7 பேரும் இரக்கும் இடம் தெரிய வந்திருப்பதாகவும், அவர்களை பிடிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil