நிலம் கையகப்படுத்தும் சட்ட திருத்த மசோதா இன்று மக்களவையில் கடும் அமளிக்கு இடையே தாக்கல் செய்யப்பட்டது.
நிலம் கையகப்படுத்தும் சட்ட திருத்த மசோதாவுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி மக்களவையில் அதனை தாக்கல் செய்தார்.
இதையடுத்து, நிலம் கையகப்படுத்தும் மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கோஷமிட்டதால் அவையை மதியம் 2 மணி வரை ஒத்திவைத்தார் சபாநாயகர் சுமித்ரா மகாஜன்.