Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி பாகிஸ்தானின் உளவுத்துறை ஏஜெண்ட்; லாலு பிரசாத்

Webdunia
செவ்வாய், 12 டிசம்பர் 2017 (16:39 IST)
2016ஆம் ஆண்டு பதான்கோட் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்த பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி உடந்தையாக இருந்ததாக லாலு பிரசாத் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.

 
2016ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள விமான நிலையத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு வீச்சு நடத்தினர். இந்த தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் பீகார் மாநில முதல்வர் லாலு பிரசாத் யாதவ், பதான்கோட் தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி உடந்தையாக இருந்தார் என குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
 
பாகிஸ்தானுக்கு அழையா விருந்தாளியாக செல்கிறார். பதான்கோட் விமான நிலையத்தில் நடந்த தாக்குதலுக்கு அந்நாட்டு உளவுத்துறைக்கு உதவுகிறார். பாகிஸ்தான் பிரதமரை பதவி ஏற்பு விழாவுக்கு அழைக்கிறார், அவருக்கு ஏராளமான பரிசுகள் கொடுக்கிறார். இருந்தாலும் பாகிஸ்தான் இன்னும் மோசமாகவே இருக்கிறது. பாகிஸ்தானை வெறுப்பதாக இருந்தால் அந்நாட்டின் நட்புநாடு அந்தஸ்தை வாபஸ் பெறதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments