Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாட்டு இறைச்சி விவகாரத்தில் மதச்சாயம் பூசப்படுகிறது: சொல்கிறார் லல்லு பிரசாத் யாதவ்

மாட்டு இறைச்சி விவகாரத்தில் மதச்சாயம் பூசப்படுகிறது: சொல்கிறார் லல்லு பிரசாத் யாதவ்
, சனி, 3 அக்டோபர் 2015 (13:04 IST)
மாட்டு இறைச்சி விவகாரத்தில் மதச்சாயம் பூச பா.ஜ.க.வும்., ஆர்.எஸ்.எஸ்.சும் முயற்சிப்பதாக ராஷ்டிரிய ஜனதா தள் கட்சித் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் குற்றஞ்சாட்டி உள்ளார்.


 
 
உத்திரப்பிரதேசத்தில் மாட்டு இறைச்சியை சாப்பிட்டதாக கூறி முதியவர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
 
இந்நிலையில் மாட்டு இறைச்சி உண்பதில் மதச்சாயம் பூச பா.ஜ.க.வும்., ஆர்.எஸ்.எஸ்.சும்  முயற்சி செய்து வருவதாக லல்லு பிரசாத் யாதவ் குற்றஞ்சாட்டி உள்ளார்.  இது குறித்து அவர் கூறுகையில், "வெளிநாடுகளில் வசிக்கும் பல இந்துக்கள் இன்றும் மாட்டிறறைச்சியை உண்கிறார்கள். பல நோய்களுக்கு காரணமாக இருக்கும் இறைச்சியை அனைத்து மக்களும் உண்ணக்கூடாது". இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil