Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தேசிய ஜனநாயக கூட்டணி அராஜகவாதிகளின் கூடாரம் - லாலு பிரசாத்

தேசிய ஜனநாயக கூட்டணி அராஜகவாதிகளின் கூடாரம் - லாலு பிரசாத்
, திங்கள், 29 ஜூன் 2015 (19:03 IST)
தேசிய ஜனநாயக கூட்டணி அராஜகவாதிகளின் கூடாரம், வரும் தேர்தலில் மக்கள் அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று ராஷ்டிரீய ஜனதா தளக் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்தார்.
 
இதுகுறித்து அவர் பாட்னாவில் செய்தியாளர்களிடம் கூறியபோது, தேசிய ஜனநாயக கூட்டணியானது அராஜகவாதிகளின் கூடாரம். அவர்கள் பிகார் மாநிலத்தில் ஆட்சியையே கைப்பற்றவில்லை, அதற்குள் அவர்களது சாயம் வெளுத்து விட்டது. அவர்கள் பிற கட்சியினரை காட்டு ராஜாங்கம் நடத்துவதாகக் கூறுகிறார்கள். ஆனால் அந்தக் கூட்டணியில் இருப்பவர் பிகார் முதல்வர் நிதீஷ்குமாரின் நெஞ்சைப் பிளப்பேன் என்று கூறுகிறார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அந்தக் கூட்டணிக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள் என்று தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil