Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுலுக்கு எதிராக இங்கிலாந்தில் வழக்கு போட போகிறேன்: லலித் மோடி ஆவேசம்..!

Webdunia
வியாழன், 30 மார்ச் 2023 (15:36 IST)
ராகுல் காந்திக்கு எதிராக இங்கிலாந்து நாட்டில் வழக்கு போட போகிறேன் என லலித் மோடி ஆவேசமாக பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த 2019 ஆம் ஆண்டு ராகுல் காந்தி ஒரு கூட்டத்தில் பேசியபோது மோடி என்ற பெயர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவருக்கு நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறை தண்டனை கொடுத்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி மேல் முறையீடு செய்து உள்ளார். 
 
இந்த நிலையில் பொருளாதார குற்றம் செய்துவிட்டு இங்கிலாந்து நாட்டிற்கு சென்ற லலித் மோடி, ராகுல் காந்திக்கு எதிராக இங்கிலாந்தில் வழக்கு தொடர போவதாக  தெரிவித்துள்ளார். 
 
இந்தியாவிலிருந்து வெளியேறி லண்டனில் கடந்த 10 ஆண்டுகள் மேலாக வசித்து வரும் லலித் மோடி ராகுல் காந்திக்கு எதிராக ஆவேசமாக தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில் நீதிக்கு பயந்து தப்பி ஓடி விட்டதாக ராகுல் காந்தியும் அவரது கூட்டாளிகள் சிலரும் மீண்டும் மீண்டும் சொல்வதை நான் பார்த்து வருகிறேன்
 
எனக்கு எதிராக எப்போது குற்றச்சாட்டு நிரூபணமாகி இருக்கிறது? ஊழல் மற்றும் நிதி மோசடிகளில் தன்னை தொடர்பு படுத்தி பேசியதற்காக ராகுல் காந்திக்கு எதிராக இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர போகிறேன் என்று தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக என்ற பெயரை விட 'Drug mafia kazhagam' என்கிற பெயரே பொருத்தமாக இருக்கும்: பாஜக

அண்ணா பெயரை உச்சரிக்க, கருணாநிதியின் மகனுக்கு அருகதை இருக்கிறதா? எடப்பாடி பழனிசாமி

ஈரானின் கைகளால் அமெரிக்காவின் முகத்தில் அறை விழுந்துள்ளது.. போருக்கு பின் வெளியே வந்த கமேனி..!

இந்திரா காந்தி ஹிட்லருக்கு சமமானவர்.. பாஜக சமூக வலைத்தள பதிவால் சர்ச்சை..!

தமிழக அரசு மதுக்கடைகளை மூட வேண்டும். போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும்.. திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments