Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புதிய தகவலை வெளியிட்ட லலித் மோடி: சிக்கலில் கார்த்திக் சிதம்பரம்

புதிய தகவலை வெளியிட்ட லலித் மோடி: சிக்கலில் கார்த்திக் சிதம்பரம்
, வியாழன், 23 ஜூலை 2015 (23:56 IST)
முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம், சிபாரிசு கேட்டு, கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்த சீனிவாசனை அனுப்பியதாக புதிய தகவல் ஒன்றை லலித் மோடி வெளியிட்டுள்ளார்.
 

 
கடந்த 2009 ஆம் ஆண்டு சென்னையில் ஏ.டி.பி.,டென்னிஸ் போட்டிகள் நடைபெறும்  குழுவின் தலைவராக கார்த்திக் சிதம்பரம் இருந்தார். அப்போது, அப்போட்டிகளை மலேசியாவில் நடத்த சர்வதேச நிர்வாகக் குழு முடிவு செய்தது.
 
இந்த முடிவுகளை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக கார்த்திக் சிதம்பரம், சிபாரிசு கேட்டு கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்த சீனிவாசனை தன்னிடம்  அனுப்பி வைத்தார் என்று லலித் மோடி அதிரடி சரவெடியை கொளுத்திப் போட்டுள்ளார்.
 
மேலும், இந்தப் போட்டிகளை சென்னையில் நடத்த சர்வதேச நிர்வாகக் குழுவிடம் நான் பேசி சமாதானம் செய்து, சென்னையில் நடைபெற வைத்தேன். இதன் மூலம் கார்த்திக் சிதம்பரத்திற்கு பல கோடி லாபம் கிடைத்தது என்று லலித் மோடி தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil