சிகிச்சைக்காக வந்தவர் பெண் மருத்துவரை கொலை செய்த சம்பவம்: கேரளாவில் அதிர்ச்சி..!

Webdunia
புதன், 10 மே 2023 (11:01 IST)
சிகிச்சைக்காக நோயாளி போல் வந்த ஒருவர் பெண் மருத்துவரை காத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது. 
 
கேரள மாநிலம் கொட்டாரகரை என்ற தாலுகாவில் சந்தீப் என்றவர் பெண் மருத்துவர் வந்தனாவிடம் சிகிச்சைக்காக வந்தார். அப்போது அவரிடம் நோய் குறித்து மருத்துவர் கேட்டுக் கொண்டிருந்த நிலையில் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மருத்துவர் வந்தனாவை சரமாரியாக குத்தினார்.
 
இதனை அடுத்து ரத்த வெள்ளத்தில் மிதந்த மருத்துவர் வந்தனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த தகவல் குறித்து கேள்விப்பட்ட காவல்துறையினர் உடனடியாக வந்து பெண் மருத்துவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
 
பெண் மருத்துவரை கொலை செய்து தப்பிய சந்தீப் என்பவரையும் தேடி வருகின்றார். இந்த நிலையில் மருத்துவர் வந்தனாவின் கொலையை கண்டித்து கேரளாவில் மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுக கூட்டணியா?!.. பிரேமலதா விளக்கம்!...

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments