Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குவைத் நாட்டின் உயரிய விருது: பிரதமர் மோடிக்கு வழங்கி கெளரவம்..!

Siva
ஞாயிறு, 22 டிசம்பர் 2024 (16:38 IST)
குவைத் நாட்டின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குவைத் நாட்டுக்கு அரசு முறை பயணமாக பிரதமர் மோடி நேற்று சென்ற நிலையில், அங்கு அவருக்கு இந்தியர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

குவைத் சிட்டியில் நடந்த 'ஹாலா மோடி' என்ற குவைத் வாழ் இந்தியர்களுடனான   சந்திப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். பின்னர், குவைத் மன்னர் ஷேக் மெஷால் அல் அஹமது அல் ஜாபர் அல் ஷாபாவை என்பவரை சந்தித்து, இந்தியா மற்றும் குவைத் தரப்பு உறவுகள் குறித்தும் ஆலோசனை செய்தார்.

இந்த நிலையில், குவைத் நாட்டின் உயரிய விருதான ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர்' என்ற விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. நட்பின் அடிப்படையில் நாட்டின் தலைவர்களுக்கும் அரச குடும்ப உறுப்பினர்களுக்கும் மட்டுமே இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, இந்த விருது முன்னாள் அமெரிக்க அதிபர்கள் பில் கிண்டன், ஜார்ஜ் புஷ், மற்றும் பிரிட்டிஷ் மன்னர் சார்லஸுக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாமானிய மக்கள் தலையில் இடி.. நகை அடமான புதிய விதிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்..!

கிரீஸ் நாட்டில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி..!

இஸ்ரேல் தூதர்க அதிகாரிகள் அமெரிக்காவில் சுட்டுக்கொலை! யார் காரணம்? - அதிபர் ட்ரம்ப் கண்டனம்!

ஹவுஸ் ஓனர் பெண்ணின் விரலை கடித்து துப்பிய வாடகைக்கு இருந்தவர்.. அதிர்ச்சி காரணம்..!

நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்.. காமெடி அதிபராக மாறிய டிரம்ப்

அடுத்த கட்டுரையில்
Show comments