Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நைட்டோடு நைட்டா வீட்டை விட்டு ஓடிய நாயுடு: சும்மாவா ஜெகன் கொடுத்த வார்னிங்!

Webdunia
வெள்ளி, 16 ஆகஸ்ட் 2019 (12:45 IST)
சந்திரபாபு நாயுடுவின் வீடு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கூறியது போலவே வெள்ளத்தால் தத்தளித்து வருகிறது. 

 
 
சமீபத்தில் ஆந்திராவில் பெய்த கனமழையாலும் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கிருஷ்ணா நதியில் வெள்ளப்பபெருக்கு ஏற்பட்டுள்ளது. 
 
இதனால் கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள சந்திரபாபு நாயுடு வீட்டின் தரைத்தளம் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. வெள்ள வரும் என எச்சரிக்கை விடுத்த போதே சந்திரபாபு நாயுடு தனது சொகுசு கார்களை மங்களகிரிக்கு கொண்டு சென்றுவிட்டார். 
மேலும் வீட்டின் கீழ்தளத்தில் இருந்த வீட்டின் பொருட்களை எல்லாம் மாடிக்கு கொண்டு செல்லப்பட்ட குடும்பத்தினருடன் அவர் இரவோடு இரவாக வீட்டை விட்டு வெளியேறி ஐதராபாத்திற்கு குடி புகுந்துவிட்டார். 
 
இந்நிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு ஏறபட்டால் கரையோரம் உள்ள வீடுகள் மற்றும் கட்டடங்கள் பாதிக்கப்படும் என்று கூறி அப்பகுதியில் இருப்பவர்களை வெளியே சொல்லு நோட்டீஸ் அனுப்பினார். 
ஆனால் அதை ஏற்காமல் சந்திரபாபு நாயுடு இன்று அவதிப்படுகிறார் என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ ஆளராமகிருஷ்ணா தெரிவித்துள்ளார். கிருஷ்ணா நதிக்கரையில் சந்திரபாபு நாயுடு குடியிருந்தது வாடகை வீடுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நூடுல்ஸ் சாப்பிட மறுத்த மனைவியை கொலை செய்த கணவன்.. பதட்டமின்றி போலீசில் சரண்..!

நெல்லை முன்னாள் எஸ்.ஐ., படுகொலை; குற்றவாளி சுட்டுப்பிடிப்பு; 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்

பெண்களுக்கு மகளிர் உதவித்தொகை போல் ஆண்களுக்கு மாதம் 2 புல் பாட்டில்: எம்.ல்.ஏ கோரிக்கை..!

ரயில்வே தேர்வு ரத்து.. அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மன்னிப்பு கேட்க வேண்டும்: காங்கிரஸ்

திருப்பதி செல்லும் ரயில்களில் புதிய எல்.எச்.பி பெட்டிகள்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments