Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொல்கத்தா மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

கொல்கத்தா மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
, சனி, 26 ஜூலை 2014 (16:12 IST)
கொல்கத்தா மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் அலுவலகத்திற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் மாலை 6.30 மணி அளவில் ஒரு மெட்ரோ ரயில் நிலையம் தகர்க்கப்படும் என்று சொல்லிவிட்டு வைத்து விட்டார்.

இதுபற்றி மெட்ரோ நிலைய அதிகாரிகள் லால்பஷார் காவல்துறை கட்டுப்பாட்டு அலுவலகத்திற்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அனைத்து ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் தொலைபேசி அழைப்பு எங்கிருந்து வந்தது என்று காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மிரட்டலுக்காக மெட்ரோ ரயில் சேவையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil