காங்கிரஸ் எம்எல்ஏ காலில் கிரண் பேடி தொபுக்கடீர்
காங்கிரஸ் எம்எல்ஏ காலில் கிரண் பேடி தொபுக்கடீர்
பதவியேற்பு விழாவின் போது, காங்கிரஸ் எம்எல்ஏவின் காலில் விழுந்து புதுவை கவர்னர் வணங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊழலுக்கு எதிரான போராட்டங்களில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுடன் இணைந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி.
பின்பு, அவர் பாஜகவில் இணைந்து, டெல்லி சட்டசபைத் தேர்தலின் போது பாஜக முதல்வர் வேட்பாளராக போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார்.
இதனையடுத்து, புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக கிரண் பேடி நியமிக்கப்பட்டார். இதற்கான பதவியேற்பு விழா நடைபெற்றது. அப்போது கிரண்பேடியை பல்வேறு அரசியல் பிரமுகர்கள் சந்தித்து வாழ்த்துக் கூறி, சால்வை அணிவித்தனர்.
இந்நிலையில், புதுவை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர், கிரண் பேடி காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற முயன்றனர். அதை அவர் தடுத்தார். இதையும் மீறி, காங்கிரஸ் எம்எல்ஏ விஜயவேணி திடீரென கிரேண்பேடி காலில் விழுந்து வணங்கினார். இதுபோல செய்யக் கூடாது என வருத்தம் தெரிவித்த கிரேன் பேடி, பதிலுக்கு அவரது காலில் விழுந்து வணங்கினார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.