Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாஜ்பாய்-அத்வானியை சந்தித்து ஆசி பெற்ற கிரண் பேடி

வாஜ்பாய்-அத்வானியை சந்தித்து ஆசி பெற்ற கிரண் பேடி
, சனி, 24 ஜனவரி 2015 (15:51 IST)
பாஜகவின் டெல்லி மாநில முதல்வர் வேட்பாளர் கிரண் பேடி இன்று பாஜக மூத்த தலைவர்களான முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் அத்வானியை சந்தித்து ஆசி பெற்றார்.
டெல்லி மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் பிப்ரவரி 7 ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. பாஜக சார்பில் முன்னாள் பெண் காவல்துறை அதிகாரி கிரண் பேடி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கபட்டார்.
 
முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கிரண் பேடி டெல்லியில் உள்ள கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். டெல்லியில் மொத்தம் 70 தொகுதிகள் உள்ளது.
 
இந்நிலையில் பாஜக வேட்பாளர் கிரண் பேடி இன்று பாஜக மூத்த தலைவர்களான முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் அத்வானியை சந்தித்து ஆசி பெற்றார்.
 
இதுகுறித்து கிரண் பேடி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
அத்வானி என்னை ஆசிர்வதித்து தேர்தலுக்காக கடுமையாக உழைக்கும்படி கூறினார் என்று கிரண் பேடி தெரிவித்தார். மேலும் பாஜகவின் மற்றொரு தலைவரையும், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜையும் சந்திக்க உள்ளதாக தெரிவித்தார்.
 
கிரண் பேடி சந்திப்பு குறித்து அத்வானி கூறுகையில், கிரண் பேடி மீது நான் முழு நம்பிக்கை வைத்துள்ளேன். தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெறுவார். அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது. கிரண் பேடி ஒரு புதிய திசையில் செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது என்று அத்வானி தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil