Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறு சிறு தீவுகளாய் மாறி வரும் கேரளா: இந்நிலை எப்போது மாறும்?

Webdunia
ஞாயிறு, 12 ஆகஸ்ட் 2018 (10:25 IST)
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் காட்டி வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத பெருமழையால் நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. 
ஆசியாவின் மிகபெரிய அணையாக திகழும் இடுக்கி அணை, வரலாறு காணாத அளவு நிரம்பியது. 26 ஆண்டுகலூக்கு பிறகு இடுக்கி அணையில் நீர் திறந்திவிடப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு வெள்ள அபாய் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
இருப்பினும், எத்தனை முனெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தாலும், திறந்துவிடப்பட்ட நீரால், பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாய் காட்சியளிக்கின்றன. இதனால் கேரள மாநிலம் நீர் சூழப்பட்டு சிறு சிறு தீவுகள் போன்று காணப்படுகிறது
 
கேரளாவில் மழை, வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் 35-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையை சரிசெய்ய ராணுவ உதவியை முதலமைச்சர் பினராயி விஜயன் நாடியுள்ளார். மேலும், அவர் பல இடங்களில் நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகிறார். 
 
மழை வரும் ஆகஸ்ட் 15 வரை மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், மழையின் தாக்கம் சற்று குறைந்த பின்னரே கேரளாவில் நிலை சரியாகும் என கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments