Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் தக்காளி விலை ரூ.160: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Webdunia
புதன், 8 டிசம்பர் 2021 (07:36 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தக்காளி விலை உயர்ந்துகொண்டே வந்தது என்பதும் அதன் பின் ஓரளவு விலை கட்டுப்படுத்தப்பட்டு பின் மீண்டும் தற்போது உயர்ந்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம் 
 
தற்போது கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளியின் விலை 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்பனை ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழகத்தை போலவே அண்டை மாநிலமான கேரளாவிலும் தக்காளியின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருவது அம்மாநில மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 
 
தொடர் மழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் கேரளாவில் ஒரு கிலோ தக்காளி விலை 160 ரூபாய் வரை விற்பனையாகி வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
மொத்த விலையில் தக்காளி ரூபாய் 120 க்கும் சில்லரை விலையில் தக்காளி ரூபாய் 160 என விற்பனையாகி வருகிறது என்றும் இதனை அடுத்து அம்மாநில அரசு தக்காளி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை முருக பக்தர் மாநாட்டிற்கு உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி: ஆனால் சில நிபந்தனைகள்..!

தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

அடுத்த மாதம் ராஜினாமா செய்ய திட்டமிட்டிருந்த விமானி.. அதற்குள் விதி முடிந்தது..!

இன்று ஒரே நாளில் தங்கம் ரூ.200 உயர்வு.. தொடர் ஏற்றத்தால் மக்கள் அதிர்ச்சி..!

விமானம் விழுந்த இடத்திலும் உயரும் பலி எண்ணிக்கை.. இதுவரை மொத்த பலி 274..!

அடுத்த கட்டுரையில்
Show comments