Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேரள தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துக்கு அப்துல் கலாம் பெயர் வைக்கப்படும்: கேரள முதலமைச்சர் அறிவிப்பு

கேரள தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துக்கு அப்துல் கலாம் பெயர் வைக்கப்படும்: கேரள முதலமைச்சர் அறிவிப்பு
, வியாழன், 30 ஜூலை 2015 (04:28 IST)
கேரள தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துக்கு முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பெயர் வைக்கப்படும் என கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி அறிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, கேரள சட்ட சபையில் முதலமைச்சர் உம்மன் சாண்டி பேசியதாவது:–
 
இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை முன்னேற்றத்துக்கு, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பங்கு இன்றியமையாதது. அப்துல் கலாம் ஒரு விஞ்ஞானியாக எங்கள் மாநிலத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ளார்.
 
எனவே, அவரை கௌவுரவப்படுத்தும் வகையில் கேரள தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துக்கு டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என பெயரிட முடிவு செய்துள்ளோம்.
 
மேலும், அப்துல் கலாமின் இறுதிச் சடங்கில் பங்கேற்க கேரளாவில் இருந்து ஒரு குழு செல்கிறது. இந்த குழுவில் நான், கவர்னர் பி.சதாசிவம், எதிர்க்கட்சி தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன், மந்திரி பி.ஜே.ஜோசப் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் என்றார். 
 

Share this Story:

Follow Webdunia tamil