Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேரள சிறைக் கைதிகளின் தினப்படி ரூ.100 ஆக உயர்த்தி அரசு உத்தரவு

கேரள சிறைக் கைதிகளின் தினப்படி ரூ.100 ஆக உயர்த்தி அரசு உத்தரவு
, புதன், 6 மே 2015 (21:13 IST)
கேரளாவில் சிறைக் கைதிகளுக்கு வழங்கப்படும் தினப்படியை உயர்த்தி வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.
 
கைதிகளை சிறையில் இருந்து விசாரணைக்காக நீதிமன்றங்களுக்கு அடிக்கடி அழைத்துச் செல்ல வேண்டும். அதேபோல் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் மருத்துவமனைகளில் சேர்க்கவேண்டும். இந்த காலகட்டங்களில் அவர்களுக்கான செலவுக்காக வழங்கப்படும் தினப்படியை உயர்த்தி வழங்க மாநில அரசு முடிவு செய்தது.
 
அதன்படி, தினப்படியை 35 ரூபாயில் இருந்து 100 ரூபாயாக உயர்த்தி வழங்க அரசு உத்தரவிட்டிருப்பதாக உள்துறை அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil