Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 65 வயது பாதிரியார்!

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 65 வயது பாதிரியார்!

Webdunia
செவ்வாய், 10 அக்டோபர் 2017 (15:02 IST)
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் 65 வயதான கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார்.


 
 
திருவனந்தபுரத்தை சேர்ந்த தேவராஜ் என்ற 65 வயதான பாதிரியார் கந்தந்திட்டா பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் கடந்த ஒரு வருடமாக பாதிரியாராக பணியாற்றி வருகிறார். இவர் விடுமுறை நாட்களில் அங்குள்ள சிறுவர்களுக்கு பைபிள் குறித்து போதித்து, நல்லொழுக்கங்கள் குறித்து போதனை வழங்கிவந்துள்ளார்.
 
அவரிடம் அந்த பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர் பைபிள் கற்று வந்துள்ளார். வழக்கம் போல அந்த சிறுமியை பைபிள் கற்றுக்கொள்ள அவரது தந்தை தேவாலயத்தில் வந்து விட்டு சென்றுள்ளார். குறிப்பிட்ட நேரம் கழித்து பைபிள் வகுப்பு முடிந்திருக்கும் என கருதிய அந்த சிறுமியின் தந்தை மீண்டும் தனது மகளை அழைக்க தேவாலயத்துக்கு சென்றார்.
 
அப்போது பாதிரியார் தேவராஜ் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துக்கொண்டு இருப்பதை அந்த தந்தை நேரில் கண்டு அதிர்ந்துவிட்டார். இதனையடுத்து அவர் உடனடியாக காவல்துறையினருக்கு இது தொடர்பாக தகவல் கொடுத்தார்.
 
பின்னர் அந்த பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினர் பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் தேவராஜை கைது செய்தனர். குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்