Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 மாதங்கள் 4 மாவட்டங்கள்; சிறுமியை சீரழித்த கும்பல்! – கேரளாவில் அதிர்ச்சி!

Webdunia
வியாழன், 17 நவம்பர் 2022 (15:08 IST)
கேரளாவில் சிறுமி ஒருவரை கடத்தி சென்ற கும்பல் 3 மாதங்களாக 4 மாவட்டங்களுக்கு அழைத்து சென்று வன்கொடுமை செய்த சம்பவம் கேரளாவை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் வீட்டில் கோபித்துக் கொண்டு வெளியேறியுள்ளார். சிறுமியை காணாமல் தவித்த பெற்றோர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் மூன்று மாதங்களுக்கு பின்னர் அந்த சிறுமியை மீட்டுள்ளனர்.

அந்த சிறுமி உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததுடன், போதைக்கும் அடிமையாகியிருந்தது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக சிறுமியிடம் விசாரித்ததில் அதிர்ச்சிக்குரிய தகவல்கள் தெரிய வந்துள்ளது.

ALSO READ: ராஜீவ் கொலையாளிகள் போல் என்னையும் விடுதலை செய்யுங்கள்: சாமியார் மனு

வீட்டிலிருந்து வெளியேறிய சிறுமி பேருந்துக்காக காத்திருந்தபோது அவரிடம் பேச்சுக் கொடுத்து இளைஞர் ஒருவர் சிறுமியை லாட்ஜூக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவருக்கு போதை மருந்து கொடுத்து சிறுமியை வன்கொடுமை செய்துள்ளார். அதை தொடர்ந்து லாட்ஜின் உரிமையாளர் மற்றும் சிலரும் சிறுமியை சீரழித்துள்ளனர்.

அவர்களிடமிருந்து தப்பிய சிறுமியை ஒரு நபர் வேலை வாங்கி தருவதாக தனது வீட்டிற்கு அழைத்து சென்று வன்கொடுமை செய்துள்ளார். அதன்பின்னர் திருச்சூர், வயநாடு, பாலக்காடு என வெவ்வேறு மாவட்டங்களுக்கு 3 மாதங்களாக சிறுமியை கடத்தி சென்று போதை பழக்கத்திற்கு அடிமையாக்கி வன்கொடுமை செய்துள்ளனர்.

இதுகுறித்து 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார் அதில் 8 பேரை கைது செய்துள்ளனர். தலைமறைவான 13 பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments