Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரக்கடிக்க இப்படி ஒரு மோசடியா? 5 ஸ்டார் ஓட்டல்களை குறிவைத்து கும்மாளம்!

Webdunia
திங்கள், 26 டிசம்பர் 2022 (19:49 IST)
5 ஸ்டார் ஓட்டல்களில் சென்று உயர்ரக மது அருந்தி விட்டு தப்பி செல்வதை வழக்கமாக கொண்டிருந்த தூத்துக்குடி நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

நாடு முழுவதும் நாள்தோறும் பல்வேறு விதமான மோசடிகள் நடந்து வருகின்றன. பொதுவாக பணம், நகையை மையப்படுத்தியே பெரும்பாலான மோசடிகள் நடைபெறுகின்றன. ஆனால் தூத்துக்குடியை சேர்ந்த நபர் ஒருவர் மதுவுக்காக செய்த ஆள்மாறாட்ட மோசடி பலரை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியை சேர்ந்த வின்செண்ட் என்ற நபர் கேரளாவில் உள்ள பிரபலமான 5 ஸ்டார் ஹோட்டல்களில் சென்று அறை எடுத்து தங்கியுள்ளார். அங்கு விலை உயர்ந்த மதுபானங்கள், உணவை ஆர்டர் செய்து சாப்பிட்டு என்ஜாய் செய்துவிட்டு பணம் கொடுக்காமல் தப்பி சென்றுள்ளார். அவரது அடையாள அட்டையை சோதிக்கும்போது அது போலி என தெரிய வந்துள்ளது.

இதுபோல போலி அடையாள அட்டையை வைத்துக்கொண்டு, சரளமாக ஆங்கிலம் பேசிக் கொண்டு பல ஸ்டார் ஹோட்டல்களில் நுழைந்து மது அருந்தி மகிழ்ந்துள்ளார் வின்செண்ட். இந்நிலையில் சமீபத்தில் ஒரு 5 ஸ்டார் ஹோட்டலில் அவ்வாறாக மோசடி செய்ய முயன்றபோது பிடிபட்டுள்ளார்.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments