Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரள நர்ஸ் நிமிஷா மரண தண்டனை நிறுத்திவைப்பு.. இந்திய - ஏமன் மதகுருமார்கள் பேச்சுவார்த்தை..!

Mahendran
செவ்வாய், 15 ஜூலை 2025 (15:36 IST)
ஏமனில் கொலை குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரளாவை சேர்ந்த நிமிஷா  என்பவருக்கு நாளை மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில், அந்த தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
நிமிஷாவை காப்பாற்ற கேரளாவை சேர்ந்த முஸ்லிம் மதகுரு அபூபக்கர் என்பவர் முயற்சி எடுத்து வருவதால் இந்த மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் கொலை செய்யப்பட்ட மஹதியின் குடும்பத்துடன் தொடர்பில் இருப்பதாகவும், அதேபோல் ஏமன் மத குருமார்களிடம் நிமிஷா குடும்பத்தினர் தரும் இழப்பீட்டை ஏற்றுக்கொள்ளுமாறும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
 
இதனை அடுத்து, இப்போதைக்கு மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்தப் பேச்சுவார்த்தைகள் உடன்பாடு ஏற்பட்டால் அவரது மரண தண்டனை ரத்து செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஏமன் நாட்டு சட்ட விதிகளின்படி, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் இழப்பீட்டை ஏற்றுக்கொண்டால் மரண தண்டனை ரத்து செய்ய முடியும். இதுவரை நிமிஷா குடும்பத்தினர் 8.6 கோடி ரூபாய் இழப்பீடு தருவதாக ஒப்புக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேரள நர்ஸ் நிமிஷா மரண தண்டனை நிறுத்திவைப்பு.. இந்திய - ஏமன் மதகுருமார்கள் பேச்சுவார்த்தை..!

பூமிக்கு திரும்பினார் சுபான்ஷூ சுக்லா.. நேரலையில் பார்த்த பெற்றோர் ஆனந்தக்கண்ணீர்..!

அதிகரிக்கும் மின் வாகனங்கள்! 500 இடங்களில் சார்ஜிங் நிலையங்கள்! - மின்வாரியம் அறிவிப்பு!

800 மதுப்பாட்டில்களையும் குடித்து தீர்த்த எலிகள்? - எலிகளை கைது செய்ய கோரிக்கை!

ஐ.ஏ.எஸ் அதிகாரி போல் நடித்த தண்ணீர் விற்பனையாளர்.. ரூ.21.65 லட்சம் தொழிலதிபரிடம் மோசடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments