Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”கஞ்சா அடிப்பது எப்படி?” பள்ளி மாணவிக்கு ஆன்லைன் க்ளாஸ்! – கேரள ஆசாமி கைது!

Webdunia
வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (11:20 IST)
கேரள பள்ளி மாணவி ஒருவருக்கு கஞ்சாவை பயன்படுத்துவது குறித்து வீடியோ வகுப்பு எடுத்த ஆசாமியை போலீஸார் கையும், கஞ்சாவுமாக பிடித்துள்ளனர்.

நாடு முழுவதும் பல பகுதிகளில் போதை பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் போதை பொருள் கடத்தல் மற்றும் பயன்பாட்டை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில் கேரள மாவட்டம் திருச்சூரை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி ஒருவர் தனக்கு கஞ்சா கிடைக்கவில்லை என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதற்கு பதிலளித்து பதிவிட்ட மட்டான்சேரியை சேர்ந்த பிரான்சிஸ் அகஸ்டின் என்ற நபர் ஒரு குறிப்பிட்ட பகுதியை சொல்லி அங்கு சென்றால் கஞ்சா கிடைக்கும் என பதிவிட்டுள்ளார்.

மேலும் கஞ்சாவை வாங்கி எப்படி பயன்படுத்த வேண்டும் என செய்து காட்டி வீடியோ ஒன்றையும் அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இது சர்ச்சைக்குள்ளான நிலையில் பதிவிட்ட பிரான்சிஸ் அகஸ்டினை போலீஸார் கைது செய்து அவரிடமிருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் இதில் தொடர்புடைய மற்ற நபர்கள், கஞ்சா விற்பனையாளர்களையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தை கொலைக்களமாக மாற்றியது திராவிட மாடல்: டிடிவி தினகரன்

திருச்செந்தூர் கடலில் குளிக்கும் பக்தர்களுக்கு மர்மமான காயங்கள்: அதிர்ச்சி தகவல்..!

16 வயது மாணவருடன் உறவு கொண்டு குழந்தை பெற்றேன்.. அமைச்சரின் சர்ச்சை பேட்டியால் பறிபோன பதவி..!

மம்தா பானர்ஜியின் இன்றைய இங்கிலாந்து பயணம் திடீர் ஒத்திவைப்பு.. என்ன காரணம்?

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments