Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடி இந்தியர்னு ஆதாரம் இருக்கா? ஆர்டிஐ மனு!

Webdunia
வெள்ளி, 17 ஜனவரி 2020 (15:22 IST)
நாடு முழுவதிலும் என்.ஆர்.சி செயலபடுத்தப்படுமோ என்னும் கேள்விகளும், குழப்பங்களும் அதிகரித்துள்ள நிலையில் பிரதமர் மோடி இந்தியர் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளதா என தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள புதிய குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து மத்திய அரசு பல்வேறு விளக்கங்களை அளித்துள்ள போதிலும் மக்கள் போராட்டத்தை பல இடங்களில் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கேரளாவில் உள்ள திரிச்சூர் மாவட்டத்தை சேர்ந்த ஜோஸ் என்பவர் பாரத பிரதமர் நரேந்திர மோடி இந்திய குடியுரிமை பெற்றவர்தானா? அவர் குடியுரிமை பெற்றவர் என்பதை நிரூபிக்கும் ஆவணம் எது என கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் மனு அளித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு என்ன பதில் வரும் என்பதுதான் பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

பேச்சுவார்த்தை இல்லை.. அமெரிக்க பொருட்களுக்கு 125% வரி.. சீனா அதிரடி..!

கே.என்.நேரு சகோதரர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.. திடீர் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதி..!

பாஜக தலைவர் இவர் தானா? எதிர்த்து யாரும் போட்டி இல்லை.. அண்ணாமலை என்ன ஆவார்?

எடப்பாடி சிங்கக்குட்டி.. ஜெயலலிதா 8 அடி பாய்ந்தால், அவர் 16 அடி பாய்வார்: செல்லூர் ராஜூ

அடுத்த கட்டுரையில்
Show comments