Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரள அரசுக்கு எதிராக மதுக்கடை பார் உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி

Webdunia
ஞாயிறு, 21 செப்டம்பர் 2014 (12:31 IST)
மதுக்கடை பார்களை மூட உத்தரவிட்ட கேரள அரசுக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
 
மாநிலம் முழுவதும் மதுவிலக்கை ஏற்படுத்த கேரள மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி அந்த மாநிலத்தில் செயல்பட்டு வந்த 418 மதுக்கடை பார்களை மூட சமீபத்தில், உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மதுக்கடை பார் உரிமையாளர்கள் சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.
 
இந்த வழக்குகள் நீதிபதிகள் கே.டி.சங்கரன், பி.டி.ராஜன் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள், கேரள அரசு புதிய மதுவிலக்கு கொள்கையை அறிவித்துள்ள நிலையில், இந்த ரிட் வழக்குகள் வீணானவை எனக் கூறி தள்ளுபடி செய்தனர்.
 
மேலும், புதிய மதுவிலக்கு கொள்கையை எதிர்த்து, ஒற்றை நீதிபதியை வழக்குதாரர்கள் நாடலாம் என நீதிபதிகள் கூறினர்.

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

Show comments