Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி: பரபரப்பு தகவல்கள்

இளவரசன்
செவ்வாய், 20 மே 2014 (14:10 IST)
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டார்.
 
திருவனந்தபுரம் அருகே வர்கலா, பட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்பாபு (53). இவரது மனைவி சதி (45). துபாயில் பணிபுரிந்து வந்த சுரேஷ்பாபு, கடந்த வருடம் ஊருக்கு வந்தார். பின்னர் வர்கலாவில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இவரிடம் கார் டிரைவராக பரமேஸ்வரன் (30) என்பவர் பணிபுரிந்து வந்தார். 
 
நேற்று முன்தினம் இரவு சுரேஷ்பாபு வீட்டில் தலையில் அடிபட்டு கிடப்பதாக அவரது மனைவி சதி வர்கலா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். காவல்துறையினர் சம்பவ இடம் வந்து பார்த்த போது, சுரேஷ்பாபு இறந்து கிடந்தார்.  
 
இந்நிலையில், சுரேஷ்பாபுவின் கார் டிரைவர் பரமேஸ்வரன் வர்கலா காவல் நிலையத்தில் சரணடைந்தார். காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. பரமேஸ்வரனுக்கும், சுரேஷ்பாபுவின் மனைவி சதிக்கும் தகாத உறவு இருந்து வந்துள்ளது.
 
இதை அறிந்த சுரேஷ்பாபு மனைவியை கண்டித்துள்ளார். இதை சதி, பரமேஸ்வரனிடம் தெரிவித்துள்ளார். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் சுரேஷ்பாபுவை பரமேஸ்வரன் தடியால் தலையில் அடித்து கொலை செய்துள்ளார். அப்போது சதியும் உடன் இருந்துள்ளார். தொடர்ந்து காவல்துறையினர் சதியை கைது செய்தனர்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments