Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேரளா பவனில் எருமை இறைச்சிதான் வழங்கப்படுகிறது: போலீஸார் பொறுமை காட்டவேண்டும் - உம்மன் சாண்டி

கேரளா பவனில் எருமை இறைச்சிதான் வழங்கப்படுகிறது: போலீஸார் பொறுமை காட்டவேண்டும் - உம்மன் சாண்டி
, செவ்வாய், 27 அக்டோபர் 2015 (14:37 IST)
டெல்லி கேரளா பவனில் மாட்டிறைச்சி பரிமாறப்படுகிறது என்று தொலைபேசியில் ஒருவர் போலீஸ்க்கு தகவல் தெரிவித்தார், இதனையடுத்து, கேரளா பவன் சென்ற டெல்லி போலீஸ் அதிக நேரமாக அங்கு சோதனை மேற்க்கொண்டனர்.


 


கேரளா பவனில் உள்ள அதிகாரிகளிடம், பணியாளர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் எருமை இறைச்சிதான் வழங்கப்படுகிறது என்றும் இது சட்டவிரோதம் கிடையாது என்றம் அவர்கள் பதில் அளித்தனர்.

கேரளா பவனில் டெல்லி போலீஸ் சோதனையில் ஈடுபட்டதை விமர்சனம் செய்து உள்ள கேரளா மாநில முதலமைச்சர் உம்மன் சாண்டி, டெல்லி போலீஸ் சற்று பொறுமை காட்டவேண்டும் என்று கூறியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உம்மன் சாண்டி, இச்சம்பவம் தொடர்பாக முழு தகவல்கள் எதுவும் எனக்கு கிடைக்கவில்லை என்றும் இது இந்த சோதனை நடத்தப்பட்ட தகவலை பத்திரிக்கையில் படித்தே தெரிந்துக் கொண்டேன் என்றும். டெல்லி போலீசார் சற்று பொறுமை காட்டவேண்டும்,” என்றும் அவர் தெரிவித்தார்

டெல்லியில் போலீஸ் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது, எனவே மத்திய உள்துறை அமைச்சகத்திடம், இதுதொடர்பாக கேரளா அரசு விவரங்களை கேட்கும் என்றும் உம்மன் சாண்டி கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil