Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய பேருந்துகள் வாங்க பணமில்லை.. குத்தகைக்கு எடுக்க திட்டம்..!

Webdunia
செவ்வாய், 7 நவம்பர் 2023 (15:37 IST)
புதிய பேருந்துகளை வாங்க பணம் இல்லை என்பதால் தனியாரிடமிருந்து பேருந்துகளை குத்தகைக்கு எடுக்க கேரள மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
கேரள மாநிலத்தில் நெடுந்தூரம் செல்லும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதனை அடுத்து தனியார் இடம் இருந்து சொகுசு பேருந்துகளை குத்தகைக்கு எடுத்து வெளி மாநில போக்குவரத்து சேவைக்கு பயன்படுத்த கேரள மாநில போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. 
 
வெளி மாநில சேவைக்காக தற்போது வெறும் 300 பேருந்துகள் மட்டுமே இருக்கும் நிலையில் இன்னும் அதிக பேருந்துகள் தேவைப்படுகிறது. இந்த நிலையில் புதிய பேருந்துகள் வாங்க தற்போதைக்கு பணம் இல்லை என்பதால் அதற்கு பதிலாக தனியாரிடமிருந்து குத்தகைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்த அரசாணை விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர்களுக்கு அபாண்டமான அபராதம் - வரலாற்று துரோகம்..! மத்திய மாநில அரசுகளுக்கு இபிஎஸ் கண்டனம்.!

டெண்டர் முறைகேடு புகார்.! எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் வழக்குப்பதிவு.!!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்றிரவு மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

திருவள்ளுவர் பிறந்தநாள் - எந்த ஆதாரமும் இல்லை..! உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!!

பள்ளி வாகனம் பழுது ஏற்பட்டதால் பள்ளி மாணவர்களை இறங்கி வாகனத்தை தள்ளி விடச் சொன்ன தனியார் பள்ளியின் அவலம்!

அடுத்த கட்டுரையில்
Show comments