Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே ஒரு மாணவிக்காக படகை இயக்கிய கேரள அரசு – குவியும் பாராட்டுகள்!

Webdunia
செவ்வாய், 2 ஜூன் 2020 (07:36 IST)
கேரளாவில் ஒரு மாணவி தேர்வெழுத செல்வதற்காக 70 பேர் பயணிக்கும் படகை இயக்கியுள்ளது கேரள நீர் போக்குவரத்து துறை.

கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு இப்போது மாணவ மாணவிகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கரிஞ்சம் பகுதியைச் சேர்ந்த மாணவி சந்திரா என்ற மாணவி தேர்வு எழுத வேண்டும் என்றால் நீர்வழியாக படகில் சென்று பள்ளிக்கு சேரவேண்டிய சூழல் உருவானது.

இதையடுத்து கேரள அரசுக்கு உட்பட்ட நீர்வழிப் போக்குவரத்து படகுத்துறையை அனுகினார் மாணவி சந்திரா. இதையடுத்து மாணவி செல்வதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மாணவிக்காக 70 பேர் அமர்ந்து செல்லும் வசதிக் கொண்ட படகை ஒரே ஒரு மாணவிக்காக இயக்கினர். ஆனாலும், ஒரு பயணிக்காக டிக்கெட் தொகையான 18.ரூபாயை மட்டுமே வசூலித்தனர். இது சம்மந்தமாக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மாணவி நீர் போக்குவரத்து துறையை நினைத்து பெருமையாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments