Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தை அடுத்து கேரள கவர்னருக்கு எதிராகவும் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு..!

Webdunia
வியாழன், 2 நவம்பர் 2023 (11:18 IST)
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 8 மசோதாக்கள் ஆளுநர் ஆரிப் முகமது கானிடம்  நிலுவையில் உள்ளன என கேரள அரசு தனது ரிட் மனுவில் தெரிவித்துள்ளது.
 
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் கால தாமதம் செய்வதாகவும், மசோதாக்களுக்கு உரிய நேரத்தில் ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது. 
 
தமிழ்நாடு, பஞ்சாப் மாநிலங்களை தொடர்ந்து ஆளுநருக்கு எதிராக கேரள அரசும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 தமிழக ஆளுநர் இதுவரை 13 மசோதாக்களை கையெழுத்திடாமல் நிறுத்தி வைத்திருப்பதாக தமிழக அரசு சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் பாஜக தரப்பில் இது குறித்து விளக்கம் அளித்த போது 13 மசோதாக்களில் 12 மசோதாக்கள் ஒரே மசோதா என்றும் பல்கலைக்கழக  வேந்தராக முதல்வர் தான்  ஆக வேண்டும் என்ற மசோதாக்கள் தான் 12 மசோதாக்களாக  பிரித்து அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

மீனவர் பிரச்சனை குறித்து முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்..! கண்டுகொள்ளாத மத்திய அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments