Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரள அரசின் ஆன்லைன் டாக்சி சேவை செயலி! – இன்று முதல் தொடக்கம்!

Webdunia
வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (08:31 IST)
தனியார் ஆன்லைன் டாக்சி சேவைகளுக்கு நிகராக கேரள அரசு புதிய டாக்சி சேவை செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் ஆன்லைன் மூலம் டாக்சி புக்கிங் செய்யும் நிறுவனங்களின் செயலிகள் மக்களால் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. இந்த செயலிகளோடு தங்களை இணைத்துக் கொள்ளும் டாக்சிகள், ஆட்டோக்களுக்கு சவாரி கிடைக்கும் அதே சமயம், டாக்சி நிறுவனங்களால் குறிப்பிட்ட சதவீதம் கமிஷனாக அதிலிருந்து பெறப்படுகிறது.

இந்த கமிஷன் சதவீதம் அதிகமாக இருப்பதாக டாக்சி, ஆட்டோ ஓட்டுனர்கள் பல சமயம் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கேரள அரசு மக்களுக்கும், டாக்சி, ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் பயன்படும் வகையில் தானே டாக்சி சேவை செயலியை தொடங்கியுள்ளது.

“கேரளா சவாரி” என்ற செயலி மூலமாக மக்கள் தங்களுக்கு தேவையான டாக்சி, ஆட்டோவை புக் செய்யலாம். டாக்சி, ஆட்டோ டிரைவர்கள் பெறும் கட்டணத்தில் இருந்து 8% மட்டும் கேரள அரசு கமிஷனாக பெறும் என கூறப்பட்டுள்ளது. இது தனியார் நிறுவனங்கள் பெரும் கமிஷனை விட குறைவு என கூறப்படுகிறது. இன்று முதல் இந்த சேவை கேரளாவில் தொடங்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments